பல்லவி
பேருந்து நிலைய தோழி
பேராவல் வந்தது தோழி
புன்னகை முகத்தில் பூவிதழ் சிரிப்பை
கொஞ்சம் சிந்தி விட்டு போடி ........
எத்தனை பாதங்கள் என்னை கடந்து சென்றது அறிவாயா ?
உந்தன் பாதங்கள் நெஞ்சை மிதித்து சென்றதை அறிவாயா?
எத்தனை வாசங்கள் என்னை ஊடுருவி சென்றது அறிவாயா?
உந்தன் வாசமே எந்தன் சுவாசம் நீயதை அறிந்தாயா?
பேருந்து நிலைய தோழி
பேராவல் வந்தது தோழி
புன்னகை முகத்தில் பூவிதழ் சிரிப்பை
கொஞ்சம் சிந்தி விட்டு போடி ........
எத்தனை பாதங்கள் என்னை கடந்து சென்றது அறிவாயா ?
உந்தன் பாதங்கள் நெஞ்சை மிதித்து சென்றதை அறிவாயா?
எத்தனை வாசங்கள் என்னை ஊடுருவி சென்றது அறிவாயா?
உந்தன் வாசமே எந்தன் சுவாசம் நீயதை அறிந்தாயா?
சரணம்-1
எத்தனை பூக்கள் கூடையில் உள்ளது
நீ மட்டும் ஏனடி சாலையில் உள்ளாய்?
எத்தனை பெண்கள் எண்ணெயில் குளித்தனர்
நீ மட்டும் ஏனடி பன்னீரில் குளித்தாய் ?
நிலவொன்று பேருந்தில் வந்ததாய் சொன்னால் வீண் வாதம் வேண்டாம் ....
சிலையொன்று சாலையில் சென்றதாய் சொன்னால் சந்தேகம் வேண்டாம்.......
மாநகரத்தின் அழகியோ ?-இந்த
மாநிலத்திற்கே ஒருத்தியோ ?
வாலிபத்தின் புரட்சியோ ?-நீ
மன்மதனின் முயற்சியோ ?
சரணம்-2
எத்தனை நபர்கள் தேனீர் பருகினர்
நீ மட்டும் ஏனடி தேனை பருகினாய்?
எத்தனை நபர்கள் புகையை விட்டனர்
நீ மட்டும் ஏனடி புகைய வைக்கிறாய் ?
சிறுமின்சாரம் இவள் சிரிப்பினில் உள்ளது ஆராய்ச்சி வேண்டாம்...
இவள் என் தொகுதி, எனக்கே தகுதி, போட்டி போட வேண்டாம் ....
காமனவன் கிழத்தியோ -என்னை
காமுகனாக்கும் முயற்சியோ?
நாடி நரம்பு செயலிழப்போ -நீ
இதயங்களின் அதிர்ச்சியோ ?
எத்தனை பூக்கள் கூடையில் உள்ளது
நீ மட்டும் ஏனடி சாலையில் உள்ளாய்?
எத்தனை பெண்கள் எண்ணெயில் குளித்தனர்
நீ மட்டும் ஏனடி பன்னீரில் குளித்தாய் ?
நிலவொன்று பேருந்தில் வந்ததாய் சொன்னால் வீண் வாதம் வேண்டாம் ....
சிலையொன்று சாலையில் சென்றதாய் சொன்னால் சந்தேகம் வேண்டாம்.......
மாநகரத்தின் அழகியோ ?-இந்த
மாநிலத்திற்கே ஒருத்தியோ ?
வாலிபத்தின் புரட்சியோ ?-நீ
மன்மதனின் முயற்சியோ ?
சரணம்-2
எத்தனை நபர்கள் தேனீர் பருகினர்
நீ மட்டும் ஏனடி தேனை பருகினாய்?
எத்தனை நபர்கள் புகையை விட்டனர்
நீ மட்டும் ஏனடி புகைய வைக்கிறாய் ?
சிறுமின்சாரம் இவள் சிரிப்பினில் உள்ளது ஆராய்ச்சி வேண்டாம்...
இவள் என் தொகுதி, எனக்கே தகுதி, போட்டி போட வேண்டாம் ....
காமனவன் கிழத்தியோ -என்னை
காமுகனாக்கும் முயற்சியோ?
நாடி நரம்பு செயலிழப்போ -நீ
இதயங்களின் அதிர்ச்சியோ ?
No comments:
Post a Comment