பல்லவி
இதுவரை இந்த இதயத்தில்
யாரும் நுழையவில்லை -அட
எதுவும் நிகழவில்லை .....
முதன்முறை உந்தன் சந்திப்பின்
தாக்கம் புரியவில்லை -ஏன்
தூக்கம் வரவுமில்லை ....
இது காதல் தானா
வெறும் உளறல்தானா
வீணாக போவது எந்தன் வயதா ?
சரணம்-1
மெல்லிடையில் மேகலையா?
உன் நினைவை அல்லவா
குழந்தையாக சுமந்தேன்....
கண்ணிமையில் கருமணியா?
உன் உருவை அல்லவா
கண்ணுக்குள் வைத்தேன்......
கைகளின் ரேகையில் உன் பெயர் கலந்ததென்ன
கன்னத்தின் வெட்கத்தில் உன் நிறம் தெரிவதென்ன
நெஞ்சத்தின் துடிப்பினில் உன் பெயர் கேட்பதென்ன
என் பெயர் கேட்டால் உன் பெயர் சொல்வதென்ன
இது காதல் தானா
வெறும் உளறல்தானா
வீணாக போவது எந்தன் வயதா ?
சரணம்-2
பூமனதில் பூகம்பமா?
உன் வருகையை அல்லவா
உவமையாக சொன்னேன் ..
மீன் விழியில் கலவரமா
உன் சிரிப்பை அல்லவா
தூண்டிலாக சொன்னேன் ....
நட்பின் போர்வையில் ஓர் கதிரவன் வந்ததென்ன
நெஞ்சின் ஆழத்தில் அவன் நுட்பமாக நுழைந்ததென்ன
உள்ளத்தின் உள்ளோர் வெள்ளப் பெருக்கு வந்ததென்ன
மௌனத்தின் அணையை சட்டென்று உடைத்ததென்ன
இது காதல் தானா
வெறும் உளறல்தானா
வீணாக போவது எந்தன் வயதா ?
இதுவரை இந்த இதயத்தில்
யாரும் நுழையவில்லை -அட
எதுவும் நிகழவில்லை .....
முதன்முறை உந்தன் சந்திப்பின்
தாக்கம் புரியவில்லை -ஏன்
தூக்கம் வரவுமில்லை ....
இது காதல் தானா
வெறும் உளறல்தானா
வீணாக போவது எந்தன் வயதா ?
சரணம்-1
மெல்லிடையில் மேகலையா?
உன் நினைவை அல்லவா
குழந்தையாக சுமந்தேன்....
கண்ணிமையில் கருமணியா?
உன் உருவை அல்லவா
கண்ணுக்குள் வைத்தேன்......
கைகளின் ரேகையில் உன் பெயர் கலந்ததென்ன
கன்னத்தின் வெட்கத்தில் உன் நிறம் தெரிவதென்ன
நெஞ்சத்தின் துடிப்பினில் உன் பெயர் கேட்பதென்ன
என் பெயர் கேட்டால் உன் பெயர் சொல்வதென்ன
இது காதல் தானா
வெறும் உளறல்தானா
வீணாக போவது எந்தன் வயதா ?
சரணம்-2
பூமனதில் பூகம்பமா?
உன் வருகையை அல்லவா
உவமையாக சொன்னேன் ..
மீன் விழியில் கலவரமா
உன் சிரிப்பை அல்லவா
தூண்டிலாக சொன்னேன் ....
நட்பின் போர்வையில் ஓர் கதிரவன் வந்ததென்ன
நெஞ்சின் ஆழத்தில் அவன் நுட்பமாக நுழைந்ததென்ன
உள்ளத்தின் உள்ளோர் வெள்ளப் பெருக்கு வந்ததென்ன
மௌனத்தின் அணையை சட்டென்று உடைத்ததென்ன
இது காதல் தானா
வெறும் உளறல்தானா
வீணாக போவது எந்தன் வயதா ?
No comments:
Post a Comment