Tuesday, May 30, 2017

                              பல்லவி
வனிலா ஐஸ் க்ரிமே  வெளியே வரலாமா
வெயிலில் நீ நடந்தால் சூரியனுக்கும் சளி பிடிக்கும்
உன்னை கண்டதும் கண்கள் உறைந்திடுமே
உன்னை பருகியதும் நெஞ்சம் குளிர்ந்திடுமே
பனி சிற்பமே என் பரவசம் நீ
வெண் புஷ்பமே ஒரு மதுரசம் நீ

                          சரணம் 1

சூடாக கரைகின்றாய் யாரின் மீதோ உன் கோபம்
லேசாக உருகுகிறாய் யாரின் மீதோ உன் காதல்
கல்லாக இருகின்றாய் ஆனாலும் ஈரம் கசிகின்றாய்
பாலாக சொறிகின்றாய் இதுவன்றோ தாய் பாசம்
ஜில்லென்ற அழகியின் ஜீம்பூம் பா-உன்னை
விரும்பாதவர் யாருண்டு சொல்லம்மா
சில்லென்ற தேகத்தை தீண்டிடவே -என்
இதழ்கள் சிலிர்ப்பது ஏனம்மா
வெண்மையிலே வெண்ணிலவும் தோற்கட்டுமே-ஒரு
ஆல்ப்ஸ் மலையே கைக்குள்ளே வந்ததிங்கே .....

                                 சரணம் -2

தேனாக இனிகின்றாய் யாரினாலோ சந்தோசம்
மெதுவாக உருகுகிறாய் யார் பிரிவினாலோ உன்வருத்தம்
பனியாக இருந்தாலும் வாசம் நூறு வீசுகிறாய்
சில நிமிடம் இருந்தாலும் மன நிறைவை தருகிறாய்
ஜிவ்வென்ற விழிகளிலே குளிரென்ன  -உன்
மேலாடை மெல்லவே விலகியதே
விர்ரென்று நரம்பில் போதையென்ன -உன்
முத்தங்கள்  இதழுக்கு உணவன்றோ
வெண்பாலில் செய்ததோர் சித்திரமே -சில
நிமிடங்களில் மறைவது விசித்திரமே
                      பல்லவி
ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் மூச்சினிலே
பல ரிக்டர் அளவு நில நடுக்கம்  பேச்சினிலே
என் வீதியில் உன் காலடி புயல் சின்னமே
என் விதியில் ஒரு பேரிடி உன் ஞாபகமே
குருதியில் ஆழிபேரலை சீற்றங்களே
வெடிப்புகள் பலநூறடி  இதயத்திலே

                    சரணம்-1
நீ வங்கக் கடலா
நான் சென்னை நகரா
என்னை ஏன் மூழ்கடித்தாய்

நீ  மேட்டூர் அணையா
நான் தஞ்சை வயலா
என்னை ஏன் சாகடித்தாய்

நீ கொள்ளிடமோ - நான்
கொள்ளை போன இடமோ

நீ வீரணமோ -நான்
வெள்ளமான நிலமோ

கல்லணையில்  கரைபுரளும் காவிரியே-காதல்
சமுத்திரத்தில்  சங்கமிக்க வந்திடுவாய் .....



                          சரணம்-2

நீ காட்டு ஓடையா
நான் தண்டவாளமா
என்னை ஏன் தகர்த்தெறிந்தாய்

நீ கொட்டும் மழையா
நான் ஓட்டைக் குடையா
என்னை ஏன் நனைகின்றாய்

நீ செம்பரம்பாக்கமோ
நான் சென்னை நகரமோ

நீ ஏரி மதகோ
நான்  உடைப்பெடுத்த  கரையோ

தஞ்சையிலே நன்செய்  தந்த காவிரியே-காதல்
நஞ்சை  தந்து கொல்வதென்ன சொல்லடியே