பல்லவி
நேற்று ஒரு சூரியன்
என்னை சுட்டெரிக்காமல் நனைத்ததென்ன
இன்று ஒரு சந்திரன்
என்னை குளிர்விக்காமல் சுட்டதென்ன
பல நூறு ஆண்கள் செல்லும் பாதையில்
இவன் மட்டும் பளிச்சென்று தெரிந்ததென்ன
பற்பல ஆண்கள் கடந்த வாழ்க்கையில்
இவன் மட்டும் சட்டென்று கவர்ந்ததென்ன
நெஞ்சை பிளந்ததென்ன
சரணம் 1
பற்பசை விளம்பரம் செய்பவனா
பளீரென சிரிக்கின்றான்
சொற்களை வியாபாரம் செய்பவனா
கவிஞனாக தெரிகின்றான்
இதயத்தைப் பறித்தானே
வழிப்பறி கொள்ளையனோ
மனதை கவர்ந்தானே
கண்ணம் வைப்பவனோ
குருதியில் தீ மூட்டி ரசிக்கும் கலவரக்காரனோ
என்னை நான் மறந்தேன்
வைத்தியக்காரன் இவன் தானோ
பெண்ணை கண்டுகொள்ளாத பைத்தியக்காரனா
கொஞ்சம் ஒதுங்கி இருக்கும் பத்தியக்காரனா காதல் பதியக்காரனா
சரணம் 2
பூக்களை பறித்து விற்பவனா
இதழ்களை பறிக்கிறான்
கற்களை விற்பனை செய்பவனா
கல்நெஞ்சனாக இருக்கிறான்
மயக்கத்தைக் கொடுத்தானே
மது விற்பனையாளனா
எதையோ எதிர்பார்த்தானே
அரசாங்க ஊழியனா
சுருதியில் பெயர் சொல்லி அழைக்கும்
இசை அமைப்பாளனா
கிறக்கத்தில் என்னவோ நான் செய்தேன் கிராதகன் இவன் தானா
பெண்ணை தவிக்க வைக்கும் தந்திரக்காரனா
நாற்புரத்தில் அலைய வைக்கும் நாசக்காரனா நாளையென் சொந்தக்காரனா