Sunday, September 17, 2017


           தொகையறா

துப்பாக்கி தோட்டாவை துச்சமென மதித்தோரே
அதிகார ஆணவத்தை எச்சமென மிதித்தோரே
மதம் கொண்ட யானைகளை மரம் கொண்டு தடுத்தோரே
மடைப்போன்ற படைக்கெதிராய் நெருப்பென்று நின்றோரே

            பல்லவி
இது மஞ்சள் பூக்கள் செங்குருதியில் குளித்த நாள்
எம் குலசாமிகள் குடல் மண்ணில் விழுந்து சரிந்த நாள்
வன்னியர் பெருவீரத்தை உலகம் மீண்டும் உணர்ந்த நாள்
எதிர்காலத்துக்காக தீபந்தமான தலைவர்கள் நாள் .
சரித்திரமானது ஒரு போராட்டம்
சாதித்து காட்டியது ஒரு போர் கூட்டம்
சரித்திரமானது ஒரு போராட்டம்
சாதித்து காட்டியது ஒரு போர் கூட்டம்
துப்பாக்கி தோட்டாவை துச்சமென மதித்தோரே
அதிகார ஆணவத்தை எச்சமென மிதித்தோரே
மதம் கொண்ட யானைகளை மரம் கொண்டு தடுத்தோரே
மடைப்போன்ற படைக்கெதிராய் நெருப்பென்று நின்றோரே
உம்மாலே உய்வடைந்தோம் –இருந்தும்
ஏனோ உம்மை மறந்தோம் –இனி
உங்கள் நினைவோடு தியாக நெருப்போடு
வன்னியனாக மீண்டு எழுவோம் .............................

           சரணம் -1
எத்தனை எத்தனை அடிகள் விழுந்ததோ  
எத்தனை எத்தனை தடிகள் உடைந்ததோ
போராடு போராடு நரம்புகள் புடைத்ததோ
நசுக்க நினைததோருக்கு அச்சப்பேய் பிடித்ததோ
உன் மண்டையோடு உடைந்ததே –இந்த
மந்தைகள் மனிதர்கள் ஆவதற்கு
குருத்து எலும்புகள் நொறுங்கியதே –இந்த
இனத்தின் கூன் நேர் ஆவதற்கு .
இட ஒதுக்கீடு போராடி பெற்றதல்ல போர் வென்று பெற்றது
விழுப்புண் சுமந்தோரால்  வீர மரணம் அடைந்தோரால் நிகழ்ந்தது
துப்பாக்கி தோட்டாவை துச்சமென மதித்தோரே
அதிகார ஆணவத்தை எச்சமென மிதித்தோரே
மதம் கொண்ட யானைகளை மரம் கொண்டு தடுத்தோரே
மடைப்போன்ற படைக்கெதிராய் நெருப்பென்று நின்றோரே
உம்மாலே உய்வடைந்தோம் –இருந்தும்
ஏனோ உம்மை மறந்தோம் –இனி
உங்கள் நினைவோடு தியாக நெருப்போடு
வன்னியனாக மீண்டு எழுவோம் .............................

               சரணம்-2
எத்தனை குமுறல்கள் பூகம்பமாக வெடித்தது
எத்தனை கோபங்கள் எரிதனலாக கொதித்தது
தொடர் சாலை மறியலில் தமிழகம் துவண்டது
ஒவ்வொரு மனதிலும் புது  நம்பிக்கை பிறந்தது
தலைஎழுத்தை மாற்ற ஒரு அரசாணை-நாம்
இழந்த அரசாளும் உரிமையை நினைவுறுத்தியது
தலைபோன போதும் தளர்ந்திடவோமா –தன்னை
துளைத்த குண்டை இதயம் பயமுறுத்தியது ...
இடஒதுக்கீடு அரசாணை அல்ல உங்கள் உயிர் ஓசை
அதை உணர்தோமே சிந்தை தெளிந்தோமே உம்மை மறவோமே
துப்பாக்கி தோட்டாவை துச்சமென மதித்தோரே
அதிகார ஆணவத்தை எச்சமென மிதித்தோரே
மதம் கொண்ட யானைகளை மரம் கொண்டு தடுத்தோரே
மடைப்போன்ற படைக்கெதிராய் நெருப்பென்று நின்றோரே
உம்மாலே உய்வடைந்தோம் –
எம்முள்ளும் உம்மை உணர்ந்தோம்  –இனி
உங்கள் நினைவோடு தியாக நெருப்போடு
வன்னியனாக மீண்டு எழுவோம் .............................
இது மஞ்சள் பூக்கள் செங்குருதியில் குளித்த நாள்
எம் குலசாமிகள் குடல் மண்ணில் விழுந்து சரிந்த நாள்
வன்னியர் பெருவீரத்தை உலகம் மீண்டும் உணர்ந்த நாள்
எதிர்காலத்துக்காக தீபந்தமான தலைவர்கள் நாள் .
தலைவர்கள் நாள் தலைவர்களால் தலைவரானவர் நாள்
தலைவர்கள் நாள்  தியாக தலைவர்கள் நாள்
எங்கள் தெய்வங்களை தலை வணங்கிடும் நாள்
மீண்டும் கிளர்ந்தெழவே இது புத்துணர்ச்சி நாள்
இன்று நம்மை நாம் உணர்ந்தால் நாளை மறுமலர்ச்சி நாள்



Friday, August 18, 2017

ஹோ மை காட்

                                            பலலவி


ஹோ மை காட்  ஹோ மை காட்
ஒரு வெண்டிலேட்டர் வேண்டும் எங்கள் இதயத்திற்கு
ஹோ மை காட்  ஹோ மை காட்
எங்கள் ஏக்க பெருமூச்சை அதில் வெளியேற்று ......

Monday, June 5, 2017

கோமளவள்ளி அடியே கோமலவள்ளி




             பல்லவி
கோமளவள்ளி  அடியே கோமலவள்ளி –நீ
கோடம்பாக்கத்துக்கு வாடி வாடி
கோமலவள்ளி  அழகே சுந்தரவள்ளி-நீ
கோடம்பாக்கத்துக்கு வாடி வாடி
இங்கோ கதாநாயகிக்கு பஞ்சம் பஞ்சம்
நீயும் வந்தால் தலைமேல வெச்சு கொண்டாடும்
உன் கோலிவுட்டு அழகுக்கு பாலிவுட் பவுசுக்கு
ஹாலிவுட்டே க்யுவில் நின்னு கால்ஷீட்டை கேட்கும்




                  சரணம்-1
உம்முன்னு சொன்னா ரசிகர் மன்றம் ஆரம்பிப்போமே –அதை  
ஜம்முனு சொன்னால் கோவில்கட்டி கும்பிடுவோமே
ஸ்க்ரீனில் வந்தால் விசிலடிச்சு ஆதரிப்போமே –அட
தேர்தலில் நின்றால் கொடிபிடித்து வாக்களிப்போமே
ஆதம்பாக்கம் அல்வாத்துண்டு கோடம்பாக்கத்தில்
ஆறுமுதல் ஆண்களெல்லாம் தியேட்டர்  வாசலில்
மீனம்பாக்கம் ரன்வே வரும் வீட்டு வாசலில்
நோட்டு மழை பொழியுமடி உந்தன் தோட்டத்தில்
அடி கனவு கன்னியே
கந்தர்வ கன்னியே
producer வயிற்றிலே பால் வார்ப்பாயா
ரசிகர்கள் கண்களிலே தேன் வார்ப்பாயா


                    சரணம்-2
ஜில்லுனு வந்தால் சளி பிடிச்சு தும்பிடுவோமே
கம்முனு வந்தால் கோபம் கொண்டு கல்லெறிவோமே
field க்கு வந்தால் போஸ்டர் ஒட்டி கொண்டாடுவோமே
industryஇல் உனக்கு நிகர் யாரும் இல்லையே
ஆண்டுதோறும் புதுமுகங்கள் நூறு வந்தது
யாரு அதில் சினிமாவில் நிலையாக நின்றது
நண்டு ஊறும் நரி ஊறும் கதைகள் வந்தது
கதாநாயகிகள் இல்லாத படமெது வென்றது
அடி காந்த கன்னியே
கவர்ச்சிக்  கன்னியே
ரசிகர்கள் எமக்காக நடிக்க வருவாயா
நடிகைகள் மனதிலே புளியை கரைப்பாயா

எழுதி வெச்சிக்கோ எழுதி வெச்சிக்கோ




            பல்லவி
எழுதி வெச்சிக்கோ எழுதி வெச்சிக்கோ
காதலை மனசுக்குள் எழுதி வெச்சிக்கோ
எழுதி வெச்சிக்கோ எழுதி வெச்சிக்கோ
முத்தங்களை உதட்டில் எழுதி வெச்சிக்கோ
கனவுகளை தூக்கத்தில் எழுதி வெச்சிக்கோ
காட்சிகளை கண்களுக்குள் எழுதி வெச்சிக்கோ
செலவுகளை கணக்கில் எழுதி வெச்சிக்கோ
சேமிப்பையும் கணக்கில் எழுதி வெச்சிக்கோ
எழுதி வெச்சிக்கோ  எழுதி வெச்சிக்கோ
அரசியல் பேச்சை தண்ணி மேல எழுதி வெச்சிக்கோ

            சரணம்-1
ரகசியத்தை அழியும்படி எழுதி வெச்சிக்கோ
நம்பிக்கையை அழியாதபடி எழுதி வெச்சிக்கோ
வெற்றிகளை  பென்சிலாலே எழுதி வெச்சிக்கோ
தோல்விகளை கல்வெட்டாக எழுதி வெச்சிக்கோ
எழுத வேண்டியதெல்லாம் டைரியில எழுதி வெச்சிக்கோ
எழுத கூடாததெல்லாம் மூளையில எழுதி வெச்சிக்கோ
மறக்க வேண்டியதெல்லாம்  slateல எழுதி வெச்சிக்கோ
மறக்க கூடாததெல்லாம் மண்டையில எழுதி வெச்சிக்கோ
எழுதி வெச்சிக்கோ  எழுதி வெச்சிக்கோ
உறுதி பாய்ந்த உள்ளத்தை எழுதி வெச்சிக்கோ

              சரணம்-2
துக்கங்களை விழிநீரில் எழுதி வெச்சிக்கோ
சந்தோசத்தை புன்னகையில் எழுதி வெச்சிக்கோ
சுற்றங்களை சுகங்களில் எழுதி வெச்சிக்கோ
நண்பர்களை ஆபத்தில் எழுதி வெச்சிக்கோ
சொல்ல முடிஞ்சதெல்லாம் நாக்குல எழுதி வெச்சிக்கோ
சொல்ல கூடாததெல்லாம் வாட்ஸ் அப்பில் எழுதி வெச்சிக்கோ
நன்மை செஞ்சவனை நெஞ்சில் எழுதி வெச்சிக்கோ
தீமை செஞ்சவனை நரம்பில் எழுதி வெச்சிக்கோ
எழுதி வெச்சிக்கோ  எழுதி வெச்சிக்கோ
மனிதாபிமானத்தை மனசுக்குள் எழுதி வெச்சிக்கோ