Friday, June 4, 2021

தொரவதி

அவன் பேசிக்கொண்டு இருநதான்

அவன் பேசிக்கொண்டு இருந்தான்

ஏகாந்தத்தின் ஒலிகளை முழுக்க முழுங்கும்

பெரும் பசியோடு பேசிக்கொண்டு இருந்தான்

தீராத தாகத்தில் வறண்ட உதடுகளை

ஈரப்படுத்தும் வார்த்தை ஒன்றை பேசிக்கொண்டு இருந்தான்.

சூழிற்குள் இருள் துரத்த கால் உதைக்கும் கருவாக

தாலாட்டில் வயப்பட்டு பசி மறக்கும் சேயாக

வசப்பட்ட வாழ்வின் கனிமலர் தவிர்த்த அடிவேராக

எப்படி முடிகிறது ஒருவனால்

மகிழ்ச்சியாக அழுகையாக சோகமாக கோபமாக செல்லமாக பரிதவிப்பாக

ஒப்பனையின்றி உயிரில் இருந்தும் ஒற்றை வார்த்தையை

அவன் பேசிக்கொண்டு இருந்தான்

அவன் பேசிக்கொண்டு இருந்தான்

அம்மா அம்மா  அம்மா