Friday, August 22, 2025

வாடி வாடி மிருதுளா-



                    பல்லவி
வாடி வாடி மிருதுளா-அட
வெட்கம் என்ன இடைஞ்சலா
வாடி வாடி வெண்ணிலா-நான்
வாடிப்  போனேன் வத்தலா
பட்டாகத்தி கண்களால் என்  பட்டத்துராணி வெல்கிறாள்
பல்லாங்குழி கன்னத்தில் மனம் சரிய கண்டு ரசிக்கிறாள்
மருதாணி பூசிய விரலால் மனதை கிள்ளி போகின்றாள்

                சரணம்-1
என்ன சொல்வதோ உன்னை என்ன சொல்வதோ
சிரிப்பாலே ஆளை கொல்லும்
கொல்லிப்பாவை என்பதோ
கொல்லிப்பாவை என்பதோ

என்ன ஆவேனோ நானும் என்ன ஆவேனோ
உன்னாலே உலகை மறந்த
கிறுக்கன் ஆவேனோ-காதல்
கிறுக்கன் ஆவேனோ

பொல்லாத பார்வையாலே நெஞ்சை புண்படுத்தினாய்
சொல்லாத சொற்களாலே என்னை துன்புறுத்தினாய்
பொய்யான கோபம் காட்டி காயப்படுத்தினாய்
மெய்யான நேசத்தை ஏற்க ஏனோ மறுக்கின்றாய்

நெஞ்சத்தின் உள்ளேவந்து நஞ்சை தடவி போகின்றாய்

                   சரணம்-2
மச்சம் என்பதா இதை மச்சம் என்பதா
அழகான கோலத்தில் விடுபட்ட
புள்ளி என்பதா
புள்ளி என்பதா

சொர்க்கம் என்பதா இதை நரகம் என்பதா
திரிசங்கு சொர்க்கம் என்று
காதலை சொல்லவா –பொல்லா
காதலை சொல்லவா
ஐந்தடி அழகு சிற்பம் ஆளை கொல்லுதே
அய்யய்யோ அணுக்கள் எல்லாம் கூப்பாடு போடுதே
வெடிகுண்டு பார்வைகளை விழிகள் வீசுதே
இடிதாங்கும் இதயம் கூட தூளாகி போகுதே

உள்ளத்தின் உள்ளே வந்து காதல் சாரல் வீசுகிறாய்









Sunday, January 12, 2025

வேர்களை தேடி

வேர்களைத் தேடும் ஒரு பயணம்

 பூவே பூவே பயணம் போ

மழை மேகத்தை தேடும் நெடும் பயணம் 

மழை துளியே துளியே பயணம் போ

நீ வாழும் வாழ்விங்கே 

வந்த தடம் எங்கெங்கே

மலரெங்கே மலர்ந்தாலும் 

வேரில்தான் அதன் வரலாறே

வேர் தேடு வேர் தேடு வேரின் வேர் தேடு

வேர் தேடும் வழி எங்கும் புதையல் நூறுண்டு.

ஏதேதோ தேடும் வாழ்வில் 

அங்கங்கே தொலைந்து போவாய்

தன்னைத்தானே தேடும்போது

வேர்களிலே புதுவெளிச்சம் காண்பாய்

எங்கெங்கோ பறக்கும் பறவை

தாய்கூட்டை தேடித் திரும்பும்

எங்கெங்கோ வாழும் மனிதா

உன்வேர் தேடி துயிலும் கொள்வாய்

புல்லுக்கும் வேர் உண்டு

மரத்துக்கும்  வேர் உண்டு

புல்லா மரமா நீ யாரென்றால்

 உன் வேரில்தான் விடையுண்டு

நீ வாழும் வாழ்விங்கே 

வந்த தடம் எங்கெங்கே

விதை விண்ணை இடித்தாலும்

வேரில்தான் அதன் உயிருண்டு

வேர் தேடு வேர் தேடு 

வேரின் வேர் தேடு

வேர் தேடும் வழி எங்கும் 

திருப்பம் பலவுண்டு

போகாத பாதை தன்னில்

பாதம் செல்லும் பயணம் போதும்

கடந்து வந்த பாதையில் கொஞ்சம்

சுகமாக பயணம் செய்வோம்

வேர்தேடும் இந்த பயணம்

தாய்மடியை தேடும் பயணம்

ஆழ்கடலில் அமைதி கொள்ளும்

அலையாக புது உருவம் கொள்வோம்

வேர்போல தேடல் கொண்டு

உன்வேரை தேடல் நன்று

முகவரியில் ஒருவரி கிடைத்தாலும்

அதுவும் உந்தன் வரலாறு

நீ வாழும் வாழ்விங்கே 

வந்த தடம் எங்கெங்கே

விதை விண்ணை இடித்தாலும்

வேரில்தான் அதன் உயிருண்டு

வேர் தேடு வேர் தேடு 

வேரின் வேர் தேடு

வேர் தேடும் பயணத்தால்

திரும்பும் வரலாறு

Friday, June 4, 2021

தொரவதி

அவன் பேசிக்கொண்டு இருநதான்

அவன் பேசிக்கொண்டு இருந்தான்

ஏகாந்தத்தின் ஒலிகளை முழுக்க முழுங்கும்

பெரும் பசியோடு பேசிக்கொண்டு இருந்தான்

தீராத தாகத்தில் வறண்ட உதடுகளை

ஈரப்படுத்தும் வார்த்தை ஒன்றை பேசிக்கொண்டு இருந்தான்.

சூழிற்குள் இருள் துரத்த கால் உதைக்கும் கருவாக

தாலாட்டில் வயப்பட்டு பசி மறக்கும் சேயாக

வசப்பட்ட வாழ்வின் கனிமலர் தவிர்த்த அடிவேராக

எப்படி முடிகிறது ஒருவனால்

மகிழ்ச்சியாக அழுகையாக சோகமாக கோபமாக செல்லமாக பரிதவிப்பாக

ஒப்பனையின்றி உயிரில் இருந்தும் ஒற்றை வார்த்தையை

அவன் பேசிக்கொண்டு இருந்தான்

அவன் பேசிக்கொண்டு இருந்தான்

அம்மா அம்மா  அம்மா

Saturday, February 1, 2020

தண்ணீரில் உன் பயணம்

பல்லவி

தண்ணீரில் உன் பயணம்

கண்ணீரில் என் பயணம்

கட்டுமரமாக நீயங்கு

பட்ட மரமாக நான் இங்கு

கரை வருவாயோ கரை ஒதுங்குவாயோ புரியாமல் புலம்புகிறேன்

புலம்பலிலே நா உலருகிறேன்

சரணம் 1

சமுத்திரத்தின் பெரும் உப்பு

என் ஒரு சொட்டு கண்ணீர் சிறுபங்கு

கடல் அலையின் கொந்தளிப்பு

என் ஒருநொடி துடிப்பில் சிறு பங்கு

ஆயிரம் அலைகள் அடித்திடும் கரையினிலே பல்லாயிரம் அலைகள் அடிக்கும் நெஞ்சிநிலே கடலினிலே மறைகிறான் என் சூரியன்- நான் கரையினிலே அவன் நினைவினிலே

வாடிடும் கருவாடு

சரணம் 2

கட்டுமரத்தின் அழைகழிப்பு

என் ஒரு நொடி தவிப்பில் கால் பங்கு துறைமுகத்தின் பரபரப்பு

என் ஒவ்வொரு அணுவிலும் அரைப்பங்கு ஆயிரம் உயிர்கள் இருக்கும் கடலினிலே என் மன்னவன் உயிர் இருக்கும் என்னுள்ளே

கண்ணீரில் கரைகிறது வெண்ணிலவு- நான் கடலினிலே அவன் நினைவினிலே

அல்லாடும் கட்டெறும்பு

Friday, January 31, 2020

நேற்று ஓர் சூரியன்

பல்லவி

நேற்று ஒரு சூரியன்

என்னை சுட்டெரிக்காமல் நனைத்ததென்ன

 இன்று ஒரு சந்திரன்

என்னை குளிர்விக்காமல் சுட்டதென்ன

பல நூறு ஆண்கள் செல்லும் பாதையில்

இவன் மட்டும் பளிச்சென்று தெரிந்ததென்ன

பற்பல ஆண்கள் கடந்த வாழ்க்கையில்

இவன் மட்டும் சட்டென்று கவர்ந்ததென்ன

நெஞ்சை பிளந்ததென்ன

சரணம் 1

பற்பசை விளம்பரம் செய்பவனா

பளீரென சிரிக்கின்றான்

சொற்களை வியாபாரம் செய்பவனா

கவிஞனாக தெரிகின்றான்

இதயத்தைப் பறித்தானே

வழிப்பறி கொள்ளையனோ

மனதை கவர்ந்தானே

கண்ணம் வைப்பவனோ

குருதியில்  தீ மூட்டி ரசிக்கும் கலவரக்காரனோ

என்னை நான் மறந்தேன்

வைத்தியக்காரன் இவன் தானோ

பெண்ணை கண்டுகொள்ளாத பைத்தியக்காரனா

கொஞ்சம் ஒதுங்கி இருக்கும் பத்தியக்காரனா காதல் பதியக்காரனா

சரணம் 2

பூக்களை பறித்து விற்பவனா

இதழ்களை பறிக்கிறான்

கற்களை விற்பனை செய்பவனா

கல்நெஞ்சனாக இருக்கிறான்

மயக்கத்தைக் கொடுத்தானே

மது விற்பனையாளனா

எதையோ எதிர்பார்த்தானே

அரசாங்க ஊழியனா

சுருதியில்  பெயர் சொல்லி அழைக்கும்

இசை அமைப்பாளனா

கிறக்கத்தில் என்னவோ நான் செய்தேன் கிராதகன் இவன் தானா

பெண்ணை  தவிக்க வைக்கும் தந்திரக்காரனா

நாற்புரத்தில் அலைய வைக்கும்  நாசக்காரனா நாளையென் சொந்தக்காரனா

Thursday, January 30, 2020

விதியென்னும் குழந்தை

பல்லவி

விதியென்னும் குழந்தை விளையாடும் விளையாட்டு பொம்மை உலகம்

சந்தர்ப்ப சூழ்நிலை சதிராடும்

சதுரங்க அட்டை வாழ்க்கை

ஏணிக்கும் பாம்புக்கும் நடுவே

உதைபடும் பந்து மனிதன்

ஏட்டிக்கும்  போட்டிக்கும் நடுவே

மிதிபடும் ஜந்து மனிதன்

பரமனை ஆடும் பரமபதம்

இதில் வெற்றியை சுவைப்பது பரமசிவம்

சரணம் 1

கண்ணீரில் பிறந்து கண்ணீரில் முடியும் மண் வாழ்வு

இதில்

தண்ணீரில் மிதந்து தத்தளிக்கும் சிறு எறும்பு நம் வாழ்வு

பன்னீரில் குளித்து பணநீரில் மிதக்கும் சிலர் வாழ்வு

மலர்

மஞ்சத்தில் புரண்டு மருந்துண்டால் தானே நல்லிரவு

வேர்வையில் கரைந்து வெக்கையில் புழுங்கும் விவசாயி

குடிப்பது

கூழ் என்றாலும் மோர் என்றாலும் சுகவாசி

பலதேசம் செல்வதும் பலகாரம் தின்பதும் யார் செயலோ

பல தோஷம் பார்ப்பதும் பழஞ்சோறு தின்பதும் யார் செயலோ

மனிதன் காற்றிலாடும் காத்தாடி ஆட்டுவிக்கிறான் ஒரு கூத்தாடி

சரணம் 2

அச்சத்தில் பிறந்து அச்சத்தில் முடிக்கும் நம்வாழ்வு

நாம்

நம்பிக்கை இழந்து அஞ்சி வாழும் வெந்த சுண்ணாம்பு

உச்சத்தில் கொடுத்து புண்ணியம் தேடும்

சிலர் வாழும்

அதில் மிச்சத்தை சேர்த்து சொத்து ஆக்குவது தானே நிலைப்பாடு

மஞ்சத்தில் மலர்ந்து மஞ்சத்தில் கருகும் விபச்சாரி

செய்வது தவறு என்றாலும் சரி என்றாலும் சன்யாசி

வெளிவேடம் அணிவதும் உள்நோக்கம் கொள்வதும் யார் செயலோ

மகான் என்று சொல்வதும் பகல் கொள்ளை அடிப்பது யார் தவறோ

மனிதன் காற்றிலாடும் ஒரு காத்தாடி

ஆட்டுவிக்கிறான்  ஒரு கூத்தாடி

Saturday, September 28, 2019

திரைப்படத்திற்கு எழுதிய மற்றொரு பாடல் பாடலின் சூழல் பள்ளி முடித்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் இதில் நாயகன் கட்டுப்பாடுகள் அற்ற ஒரு வாழ்க்கையை கல்லூரியில் தேடுபவன் நாயகியோ கொஞ்சம் முதிர்ச்சி உடையவள் இருவரும் சந்திக்கும் இடத்தில் மாணவர்கள் அதாவது ஆண் பெண் மற்றும் ஆசிரியர்கள் கலந்து பாடுவதுபோல் ஒரு பாடல் வேண்டுமென இயக்குனர் கேட்க நான் எழுதி மெட்டமைத்த பாடல் பல்லவி ஆண் கல்விகற்கும் சோலை கல்லூரி சாலை நாங்கள் இங்கு புதுமுகங்கள் பெண் நட்பை கற்கும் சாலை கல்லூரி சாலை நித்தம் நித்தம் அறிமுகங்கள் ஆண் சுய அறிமுகத்திற்கு செவிகொடுத்தோம் சில அறுவைகளுக்கு செவி அடைத்தோம் பெண் சில அறிமுகத்திற்கு கை கொடுத்தோம் சில அறிமுகத்திற்கு கைகுவித்தோம் குழு வகுப்பு என்னும் குடும்பத்தில் உறுப்பினர் ஆனோம் சரணம் -1 ஆண் அழகிய பெண்களிடம் நெஞ்சம் மயங்கி அறிமுகம் செய்திடுவோம் கொஞ்சம் தயங்கி பெண் சீனியர் ராக்கிங்கில் கண்கள் கலங்கி வகுப்பறை நுழைகையில் கொஞ்சம் மிரட்சி ஆண் யூனிபார்ம் போயாச்சு ஹோம்வொர்க் போயாச்சு பெண் பின்னல் ஜடை போயாச்சு லூஸ் ஹேரே ஸ்டைலாச்சு ஆண் எங்கள் hodஐ அரக்கனாக பார்க்கிறோம் பெண் எங்கள் hodஐ தெய்வமாக தொழுகிறோம் ஆசிரியர் பள்ளிக்கூட பிரம்பு இல்லாததால் குறும்பு வாலை நறுக்கவே இருக்கு இன்டர்னல் மார்க் சரணம்-2 பெண் ஜோவியல் பேச்சுக்கள் கொஞ்சம் கவர்ச்சி ஹார்மோன்கள் செய்திடும் இன்ப கிளர்ச்சி ஆண் டூவீலர் பயணத்தில் சிட்டாய் பறந்து அச்சமூட்டி ரசிப்பதில் மிக்க மகிழ்ச்சி பெண் பேதங்கள் போயாச்சு ஆணும் பெண்ணும் ஒன்றச்சு ஆண் கட்டெலாம் பழசாச்சு சைட் மட்டுமே லைஃப் ஆச்சு பெண் எங்கள் காலேஜோ நண்பர்களின் வேடந்தாங்கல் ஆண் எங்கள் காலேஜ் கலர்களின் வேடந்தாங்கள் குழு கூலாங்கல்லு சிரிப்பு கொஞ்ச நேரம் படிப்பு வாலிப பருவ ஆட்டோகிராஃப் காலேஜ் லைஃப்