பல்லவி
கோமளவள்ளி அடியே கோமலவள்ளி –நீ
கோடம்பாக்கத்துக்கு
வாடி வாடி
கோமலவள்ளி அழகே சுந்தரவள்ளி-நீ
கோடம்பாக்கத்துக்கு
வாடி வாடி
இங்கோ கதாநாயகிக்கு
பஞ்சம் பஞ்சம்
நீயும் வந்தால்
தலைமேல வெச்சு கொண்டாடும்
உன் கோலிவுட்டு
அழகுக்கு பாலிவுட் பவுசுக்கு
ஹாலிவுட்டே
க்யுவில் நின்னு கால்ஷீட்டை கேட்கும்
சரணம்-1
உம்முன்னு சொன்னா
ரசிகர் மன்றம் ஆரம்பிப்போமே –அதை
ஜம்முனு சொன்னால்
கோவில்கட்டி கும்பிடுவோமே
ஸ்க்ரீனில் வந்தால்
விசிலடிச்சு ஆதரிப்போமே –அட
தேர்தலில் நின்றால்
கொடிபிடித்து வாக்களிப்போமே
ஆதம்பாக்கம்
அல்வாத்துண்டு கோடம்பாக்கத்தில்
ஆறுமுதல்
ஆண்களெல்லாம் தியேட்டர் வாசலில்
மீனம்பாக்கம் ரன்வே
வரும் வீட்டு வாசலில்
நோட்டு மழை
பொழியுமடி உந்தன் தோட்டத்தில்
அடி கனவு கன்னியே
கந்தர்வ கன்னியே
producer வயிற்றிலே
பால் வார்ப்பாயா
ரசிகர்கள் கண்களிலே
தேன் வார்ப்பாயா
சரணம்-2
ஜில்லுனு வந்தால்
சளி பிடிச்சு தும்பிடுவோமே
கம்முனு வந்தால்
கோபம் கொண்டு கல்லெறிவோமே
field க்கு வந்தால்
போஸ்டர் ஒட்டி கொண்டாடுவோமே
industryஇல் உனக்கு
நிகர் யாரும் இல்லையே
ஆண்டுதோறும்
புதுமுகங்கள் நூறு வந்தது
யாரு அதில்
சினிமாவில் நிலையாக நின்றது
நண்டு ஊறும் நரி
ஊறும் கதைகள் வந்தது
கதாநாயகிகள் இல்லாத
படமெது வென்றது
அடி காந்த கன்னியே
கவர்ச்சிக் கன்னியே
ரசிகர்கள் எமக்காக
நடிக்க வருவாயா
நடிகைகள் மனதிலே
புளியை கரைப்பாயா