Thursday, June 1, 2017

மன்னாதி மன்னனெல்லாம் மண்ணு தின்ன போர்க்களம்



                   பல்லவி
மன்னாதி மன்னனெல்லாம் மண்ணு தின்ன போர்க்களம்
என்னோட தேகம் அல்லவா
வில்லாதி வில்லனெல்லாம் வீழ்ச்சி கண்ட போர்க்களம்
என்னோட தேகம் அல்லவா
 ராஜாதி ராஜனின் ரகசியங்கள் என்னிடம்
சூராதி சூரனின் சூத்திரங்கள் என்னிடம்
தேவாதி தேவனின் வரங்களும் என்னிடம்
அசுராதி அசுரனின் சாபங்களும் என்னிடம்
அழகுக்கு நான் தானே உலகத்தில் முதலிடம்

                 சரணம்-1
படச்சவனும் என்னை பார்த்தால் மிரட்சி அடைவான்
படைப்பு தொழிலை தற்காலிகமாக தள்ளி வைப்பான்
மன்மதனும் என்னை பார்த்தால் அதிர்ச்சி அடைவான்
ரதிதேவியை மறந்துவிட்டு என் பின்னால் வருவான்
நான் புள்ளிவைத்து கோலம் போட்டால் வீதியெங்கும் ஆண்கள் கூட்டம்
நான் உதட்டை சுளித்து பேசும் பேச்சின் நச்சுத்தன்மை ஆளை கொல்லும்
ஆண்கள் இதயம் கண்ணாடி சீசா-அதை
எந்தன் விழிகள் உடைக்கும் சுக்குநூறா

                  சரணம்-2
அரிச்சந்திரன் என்னை பார்த்தால் மாற்றம் அடைவான்
 தன் மெய்மொழிகள் மறந்து விட்டு பொய்யே பேசுவான்
கந்தர்வனும் என்னை பார்த்தால் கலக்கம் அடைவான்
இதயத்தை கவர்ந்ததாக குற்றம் சாட்டுவான்
நான் குழாயடியில் தண்ணீர் பிடித்தால் குடத்தில் எல்லாம் காதல் வெள்ளம்
தலை குளித்து விட்டு கோவில் சென்றால் அபிசேகங்கள் எனக்கு வரும்
ஆண்கள் எல்லாம் தூக்கட்டும் கூஜா-நான்
நவீன யுகத்து கிளியோபாட்ரா








No comments:

Post a Comment