பல்லவி
தண்ணீரில் உன் பயணம்
கண்ணீரில் என் பயணம்
கட்டுமரமாக நீயங்கு
பட்ட மரமாக நான் இங்கு
கரை வருவாயோ கரை ஒதுங்குவாயோ புரியாமல் புலம்புகிறேன்
புலம்பலிலே நா உலருகிறேன்
சரணம் 1
சமுத்திரத்தின் பெரும் உப்பு
என் ஒரு சொட்டு கண்ணீர் சிறுபங்கு
கடல் அலையின் கொந்தளிப்பு
என் ஒருநொடி துடிப்பில் சிறு பங்கு
ஆயிரம் அலைகள் அடித்திடும் கரையினிலே பல்லாயிரம் அலைகள் அடிக்கும் நெஞ்சிநிலே கடலினிலே மறைகிறான் என் சூரியன்- நான் கரையினிலே அவன் நினைவினிலே
வாடிடும் கருவாடு
சரணம் 2
கட்டுமரத்தின் அழைகழிப்பு
என் ஒரு நொடி தவிப்பில் கால் பங்கு துறைமுகத்தின் பரபரப்பு
என் ஒவ்வொரு அணுவிலும் அரைப்பங்கு ஆயிரம் உயிர்கள் இருக்கும் கடலினிலே என் மன்னவன் உயிர் இருக்கும் என்னுள்ளே
கண்ணீரில் கரைகிறது வெண்ணிலவு- நான் கடலினிலே அவன் நினைவினிலே
அல்லாடும் கட்டெறும்பு
No comments:
Post a Comment