Saturday, February 1, 2020

தண்ணீரில் உன் பயணம்

பல்லவி

தண்ணீரில் உன் பயணம்

கண்ணீரில் என் பயணம்

கட்டுமரமாக நீயங்கு

பட்ட மரமாக நான் இங்கு

கரை வருவாயோ கரை ஒதுங்குவாயோ புரியாமல் புலம்புகிறேன்

புலம்பலிலே நா உலருகிறேன்

சரணம் 1

சமுத்திரத்தின் பெரும் உப்பு

என் ஒரு சொட்டு கண்ணீர் சிறுபங்கு

கடல் அலையின் கொந்தளிப்பு

என் ஒருநொடி துடிப்பில் சிறு பங்கு

ஆயிரம் அலைகள் அடித்திடும் கரையினிலே பல்லாயிரம் அலைகள் அடிக்கும் நெஞ்சிநிலே கடலினிலே மறைகிறான் என் சூரியன்- நான் கரையினிலே அவன் நினைவினிலே

வாடிடும் கருவாடு

சரணம் 2

கட்டுமரத்தின் அழைகழிப்பு

என் ஒரு நொடி தவிப்பில் கால் பங்கு துறைமுகத்தின் பரபரப்பு

என் ஒவ்வொரு அணுவிலும் அரைப்பங்கு ஆயிரம் உயிர்கள் இருக்கும் கடலினிலே என் மன்னவன் உயிர் இருக்கும் என்னுள்ளே

கண்ணீரில் கரைகிறது வெண்ணிலவு- நான் கடலினிலே அவன் நினைவினிலே

அல்லாடும் கட்டெறும்பு

No comments:

Post a Comment