Thursday, January 30, 2020

விதியென்னும் குழந்தை

பல்லவி

விதியென்னும் குழந்தை விளையாடும் விளையாட்டு பொம்மை உலகம்

சந்தர்ப்ப சூழ்நிலை சதிராடும்

சதுரங்க அட்டை வாழ்க்கை

ஏணிக்கும் பாம்புக்கும் நடுவே

உதைபடும் பந்து மனிதன்

ஏட்டிக்கும்  போட்டிக்கும் நடுவே

மிதிபடும் ஜந்து மனிதன்

பரமனை ஆடும் பரமபதம்

இதில் வெற்றியை சுவைப்பது பரமசிவம்

சரணம் 1

கண்ணீரில் பிறந்து கண்ணீரில் முடியும் மண் வாழ்வு

இதில்

தண்ணீரில் மிதந்து தத்தளிக்கும் சிறு எறும்பு நம் வாழ்வு

பன்னீரில் குளித்து பணநீரில் மிதக்கும் சிலர் வாழ்வு

மலர்

மஞ்சத்தில் புரண்டு மருந்துண்டால் தானே நல்லிரவு

வேர்வையில் கரைந்து வெக்கையில் புழுங்கும் விவசாயி

குடிப்பது

கூழ் என்றாலும் மோர் என்றாலும் சுகவாசி

பலதேசம் செல்வதும் பலகாரம் தின்பதும் யார் செயலோ

பல தோஷம் பார்ப்பதும் பழஞ்சோறு தின்பதும் யார் செயலோ

மனிதன் காற்றிலாடும் காத்தாடி ஆட்டுவிக்கிறான் ஒரு கூத்தாடி

சரணம் 2

அச்சத்தில் பிறந்து அச்சத்தில் முடிக்கும் நம்வாழ்வு

நாம்

நம்பிக்கை இழந்து அஞ்சி வாழும் வெந்த சுண்ணாம்பு

உச்சத்தில் கொடுத்து புண்ணியம் தேடும்

சிலர் வாழும்

அதில் மிச்சத்தை சேர்த்து சொத்து ஆக்குவது தானே நிலைப்பாடு

மஞ்சத்தில் மலர்ந்து மஞ்சத்தில் கருகும் விபச்சாரி

செய்வது தவறு என்றாலும் சரி என்றாலும் சன்யாசி

வெளிவேடம் அணிவதும் உள்நோக்கம் கொள்வதும் யார் செயலோ

மகான் என்று சொல்வதும் பகல் கொள்ளை அடிப்பது யார் தவறோ

மனிதன் காற்றிலாடும் ஒரு காத்தாடி

ஆட்டுவிக்கிறான்  ஒரு கூத்தாடி

No comments:

Post a Comment