பல்லவி
காதல் பூதம் கடித்து தின்னுமா
குருதியைக் குடித்து சுவையை சொல்லுமா ?
காதல் பூதம் ரசிகன் ஆகுமா?
கவிதையை படித்து கருது சொல்லுமா?
மோதி விளையாடுமா - இல்லை
ஓடி விளையாடுமா?
வாமனனாக இருக்குமா- இல்லை
விஸ்வரூபம் எடுக்குமா?
சரணம் -1
ஆறடி நீள நகங்களை வளர்த்து அருவெறுப்பாக இருக்குமா?
தீமிதி போல சுகங்களை எரித்து தகதகவென ஜொலிக்குமா?
கருநாகங்களை தாடியென தொங்கவிட்டு திரியுமா?
விஷ தேளினத்தை மீசையென சொல்லிக்கொண்டு அலையுமா?
இடுகாட்டு சாம்பலை பூசிக்கொண்டு கூத்தாடுமா ?
கருவாட்டு வீச்சத்தை வீசிக் கொண்டு தள்ளாடுமா?
உரசிடும் போதெல்லாம் வந்திடுமா ?
கேட்பதை எல்லாம் தந்திடுமா ?
சரணம் -2
பேரிடிப் போல விரல்களை பதித்து நிலநடுக்கமாக பிளக்குமா ?
காளியை போல குடல்களை பிடுங்கி நார் நாராக கிழிக்குமா ?
கதிர் வீச்சுகளை பார்வையென பாயவிட்டு பார்க்குமா?
அதிர் வேட்டுக்களை ஏப்பமென விட்டு விட்டு ரசிக்குமா?
விளையாட்டு கோபத்தை காரணமாக்கி பந்தாடுமா?
மலையாட்டு கொம்பினை கூராய் தீட்டி பாய்ந்திடுமா?
ஆயிரம் கண்கள் இருந்திடுமா ?
ஆணவம் தலைவிரித்தாடிடுமா?
காதல் பூதம் கடித்து தின்னுமா
குருதியைக் குடித்து சுவையை சொல்லுமா ?
காதல் பூதம் ரசிகன் ஆகுமா?
கவிதையை படித்து கருது சொல்லுமா?
மோதி விளையாடுமா - இல்லை
ஓடி விளையாடுமா?
வாமனனாக இருக்குமா- இல்லை
விஸ்வரூபம் எடுக்குமா?
சரணம் -1
ஆறடி நீள நகங்களை வளர்த்து அருவெறுப்பாக இருக்குமா?
தீமிதி போல சுகங்களை எரித்து தகதகவென ஜொலிக்குமா?
கருநாகங்களை தாடியென தொங்கவிட்டு திரியுமா?
விஷ தேளினத்தை மீசையென சொல்லிக்கொண்டு அலையுமா?
இடுகாட்டு சாம்பலை பூசிக்கொண்டு கூத்தாடுமா ?
கருவாட்டு வீச்சத்தை வீசிக் கொண்டு தள்ளாடுமா?
உரசிடும் போதெல்லாம் வந்திடுமா ?
கேட்பதை எல்லாம் தந்திடுமா ?
சரணம் -2
பேரிடிப் போல விரல்களை பதித்து நிலநடுக்கமாக பிளக்குமா ?
காளியை போல குடல்களை பிடுங்கி நார் நாராக கிழிக்குமா ?
கதிர் வீச்சுகளை பார்வையென பாயவிட்டு பார்க்குமா?
அதிர் வேட்டுக்களை ஏப்பமென விட்டு விட்டு ரசிக்குமா?
விளையாட்டு கோபத்தை காரணமாக்கி பந்தாடுமா?
மலையாட்டு கொம்பினை கூராய் தீட்டி பாய்ந்திடுமா?
ஆயிரம் கண்கள் இருந்திடுமா ?
ஆணவம் தலைவிரித்தாடிடுமா?
No comments:
Post a Comment