Monday, November 14, 2016

                 ப்ல்லவி
மூச்சு காற்றை கடத்தினாயடி
என் நெஞ்சில் உன்னை நிரப்பினாயடி....
மூன்றாம் உலகம் காட்டினாயடி
புதுமனிதனாக மாற்றினாயடி.....
புதிராக இருந்தேனே -என்னை
எனக்கே அறிமுகம் செய்தாயே...
புதராக இருந்தேனே -புது
பாதை அமைத்தாயே....
அசுத்தம் நானடி -என்னை
தூய்மை ஆக்கினாய்........
தெய்வம் நீயடி -என்னை
இரட்சித்துக் கொள்கிறாய் .............
            
                 சரணம்-1
முள்ளின் நுனியில் பனித்தூறல் நீ
கண்ணி வெடி மேல் பட்டுபூச்சி நீ
போர்க்களம் தன்னில் பூத்த பூச்செடி
போர்வீரனை எளிதில் சாய்த்து விட்டதே......
புண்பட்டு கிடந்தேனே மருந்தாக வந்தாயே
துளைகண்ட இதயத்தில் வலி மறக்க செய்தாயே.....
சீல் பிடித்த செல்லோடு செல்லரித்து வீழ்ந்தேனே
புதுரத்தம் பாய்ச்சுகிறாய் உயிர் கொண்டு எழுந்தேனே....
நான் பாதகம் செய்திட பிறந்த படுபாவியடி
என்னை திருத்திட பிறந்த ஞானியும் நீ.......................

                        சரணம்-2
வாளின் விளிம்பில் வெள்ளை கொடியும் நீ
அம்பின் நுனியில் வெள்ளை பறவை நீ
புயலை வெல்லும் முல்லை அரும்பு நீ
பாலைவனத்தில் சிற்றோடை நீரும் நீ
இருள் சூழ்ந்து கிடக்கிறதே....
 எங்கு செல்லும் என் பாதை?
நிலவாக வந்தாயே......
வழிநடத்தி சென்றாயே......
மழை தூறல் விழுகின்றதே....
 எங்கு நானும் ஒதுங்கிடுவேன்?
முந்தானை குடை தந்தாய் ...
உன்னை நானும் வணங்கிடுவேன்...
நான் எங்கோ பிறந்து நடை பயின்ற காட்டு ஓடையடி
என்னை தடுக்கும் திறம் கொண்ட ஒரே அணையும் நீ ............................

No comments:

Post a Comment