பல்லவி
மலராத மலரை காற்று முத்தமிட்டு திறக்கிறதே
நிரம்பாத அணையும் நேற்று நிரம்பி நிரம்பி வழிகிறதே
திறவாத இதயத்தை காதல் தொட்டு தொட்டு திறக்கிறதே
குழம்பாத மனதும் இன்று குழம்பி குழம்பி தவிக்கின்றதே
சரணம்-1
விழி வழியே நான் தொலைத்ததை விழிவழியே அவளெடுத்தாள்
வழிப்பறியில் பறிகொடுக்கவில்லை விழிப்பறியில் பறிகொடுத்தேன் ..
ஒரு மெலிய மேலாடை என்னை மூடி சென்றதை சொல்லவா
ஒரு நுண்ணிய பார்வை என்னை நோகடித்ததைச் சொல்லவா
கண்களென்னும் தூரிகை வரைந்த ஓவியம் காதலா
பெண்மையென்னும் தேவதை தெய்வம் தந்த சாபமா
இடியும் மழையும் இணைந்து தாக்கும்
நீ சிரித்த நேரத்தில் ....
புயலும் வெயிலும் மாறித தாக்கும்
நீ கடந்த வேளையில் .......
சரணம்-2
துளிவிஷமே நான் அருந்தியது -அதை
சிறுசிரிப்பில் கரைய வைத்தாள்
கனிரசமே நான் நினைத்திருந்தேன்
மதுரசமென உணர வைத்தாள்
ஒரு துல்லிய தூறல் என்மேல் தூறி சென்றதை சொல்லவா
ஒரு மெல்லிய ஆசை என்னை ஆக்ரமித்ததை சொல்லவா
இளமையென்னும் வானிலே தோன்றும் வானவில் காதலே
காலமென்னும் மழையிலே காதல் கரைந்து போகுமோ
சனியும் விதியும் சேர்ந்து வந்தால்
நானும் என்ன செய்வேன்
கனத்த இதயம் உடைய பெண்ணே
உன்னை குற்றம் சொல்வேன்
மலராத மலரை காற்று முத்தமிட்டு திறக்கிறதே
நிரம்பாத அணையும் நேற்று நிரம்பி நிரம்பி வழிகிறதே
திறவாத இதயத்தை காதல் தொட்டு தொட்டு திறக்கிறதே
குழம்பாத மனதும் இன்று குழம்பி குழம்பி தவிக்கின்றதே
சரணம்-1
விழி வழியே நான் தொலைத்ததை விழிவழியே அவளெடுத்தாள்
வழிப்பறியில் பறிகொடுக்கவில்லை விழிப்பறியில் பறிகொடுத்தேன் ..
ஒரு மெலிய மேலாடை என்னை மூடி சென்றதை சொல்லவா
ஒரு நுண்ணிய பார்வை என்னை நோகடித்ததைச் சொல்லவா
கண்களென்னும் தூரிகை வரைந்த ஓவியம் காதலா
பெண்மையென்னும் தேவதை தெய்வம் தந்த சாபமா
இடியும் மழையும் இணைந்து தாக்கும்
நீ சிரித்த நேரத்தில் ....
புயலும் வெயிலும் மாறித தாக்கும்
நீ கடந்த வேளையில் .......
சரணம்-2
துளிவிஷமே நான் அருந்தியது -அதை
சிறுசிரிப்பில் கரைய வைத்தாள்
கனிரசமே நான் நினைத்திருந்தேன்
மதுரசமென உணர வைத்தாள்
ஒரு துல்லிய தூறல் என்மேல் தூறி சென்றதை சொல்லவா
ஒரு மெல்லிய ஆசை என்னை ஆக்ரமித்ததை சொல்லவா
இளமையென்னும் வானிலே தோன்றும் வானவில் காதலே
காலமென்னும் மழையிலே காதல் கரைந்து போகுமோ
சனியும் விதியும் சேர்ந்து வந்தால்
நானும் என்ன செய்வேன்
கனத்த இதயம் உடைய பெண்ணே
உன்னை குற்றம் சொல்வேன்
No comments:
Post a Comment