Monday, January 14, 2019

2017 இல் பல்லவியை மட்டும் எழுதி விட்டு அப்படியே விட்ட பாடலை இன்று நிறைவு செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் முடித்த பாடல்


        பல்லவி

ஆண்:    ஜுனிலே ஒரு அடை மழையில்
நீயும் நானும் ஒரு குடையில் (...)
நனையாமல் இருக்க  நெருங்கி வந்தோம்-பின்
நெருங்காமல் இருக்க விலகி சென்றோம்
                நனையவா நெருங்கவா சொல் தோழி

பெண்:  ஜுனிலே ஒரு அடை மழையில்
நீயும் நானும் ஒரு குடையில் (...)
நனையாமல் இருக்க  நெருங்கி வந்தோம்-பின்
நெருங்காமல் இருக்க விலகி சென்றோம்
தயக்கமேன் நெருங்கி வா என் தோழா


 சரணம்-1

ஆண்:     மண்ணிலே மழைத்துளி  எழுப்பும் சப்தம்
சொ ட்  சொ ட்  சொட்-உன்
நெஞ்சிலே  நெருக்கத்தின் சப்தம்
சொல் சொல் சொல்

பெண்: தோழனே தோழனே  ஏன் விரைகிறாய்
சொல் சொல் சொல்- இந்த
நெருக்கம்  நீடிக்க  வேண்டும்
நில் நில்  நில்

ஆண்:  குடையுடன் நடக்கும் வெண்ணிலவு
இதுவே இதுவே நல்லிரவு

பெண்: என் இணையுடன் நடக்கும் முதலிரவு
`நேரமோ நேரமோ நள்ளிரவு

ஆண்:     உன் நெருக்கத்தாலே சிறு தடுமாற்றம் கண்ணே
விட்டு விலகவா இல்லை தொடரவா  சொல் தோழி

சரண,ம்-2

பெண்: சிதறிடும் சாரலில்  ஒதுங்கிட ஓரிடம்
சொல் சொல் சொல்—உன்
ஸ்பரிசத்தை விட்டு கொஞ்சம் ஒதுங்கிட
வழி சொல் சொல்

ஆண்:  குதித்தெழும்  குமிழிகள் உடைந்திடும் சப்தம்
டப் டப் டப் –மனதில்
துளிர்விடும்  ஆசையை உடைத்திட
வழி சொல் சொல்

பெண்: குடையுடன் தொடங்கும் நம் பயணம்
தொடருமா தொடருமா வாழ்நாள் முழுதும்

ஆண்:    நீடிக்கும் நீடிக்கும் ஒரு நிசப்தம்
கலைத்திடு கலைத்திடு மனம் உரைக்கும்

பெண்: மௌனத்தானே  என்னுள் வழிந்தோடும்  அன்பே
விட்டு விலகவா இல்லை தொடரவா  சொல் தோழா



No comments:

Post a Comment